நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 March 2011

அட! ஆமாம்ங்க..




அவஸ்தைகளுக்கு பிள்ளையார்சுழி போட்டாயிற்று
ஆனால் அழகான அவஸ்தைகள்...

குறுந்தகவல்கள், அழைப்புகள் என்று
எந்நேரமும் கைபேசி சிணுங்க
அம்மா கேட்கிறாள் யாரென்று
அலுவலக தோழன் என்று
பொய் பேச பழகியாயிற்று
பொய் மட்டுமல்ல
பல பல பொய்கள்

உறங்குவதும் விழிப்பதும்
அனிச்சை செயலால் மட்டுமே..
சம்பந்தம் இல்லாத சண்டைகளுக்கெல்லாம்
பொறுப்பேற்க பழகி பழகி
"சமாதான படுத்துவது எப்படி?"
புத்தகம் கூட எழுத துவங்கிவிட்டேன்

உணவுண்ணும் குழந்தை போல
இரையும் பருக்கைகளும்
எதிரிலிருக்கும் தட்டும்கூட தெரியவில்லை
கோவிலுக்கு சென்றால்
அம்மனுக்கு 'பிங்க்' புடவை
அழகாயிருக்கும் என்று தோன்றுகிறது

கரடிபொம்மையை நானும்
கட்டிக்கொண்டு உறங்கமுயன்றபோது
அதிர்ச்சியானார்கள் அறைதோழர்கள்
யார் சிரித்தாலும், முறைத்தாலும்
ஏதோபோல் அவர்களை கடந்ததில்
விளங்கமுடியா கவிதையானேன்

ஆழ்ந்த ஆங்கிலபுலமையையும்
அகோனின் பாடல்களையும்
சாக்லேட்டின் சுவைகளையும் 
'காப்பி ஷாப்' பெயர்களையும்
இன்னும் பலதையும் 
ஏற்றி ஏற்றி
தாங்கமுடியாமல் திணறுது மூளை

'பெப்பெர்மின்ட்', 'டிக்டாக்'
எல்லாம் மென்று
'க்ளோஸ் அப்', 'கோல்கேட் பிளாக்ஸ்' 
என்று புன்னகை சிந்தி 
'ஜெல்' போட்டு, 'ஸ்பைக்ஸ்' வைத்து
'கார்னியர் மென்' தடவி
'ஆக்ஸ்' அடித்து
'வுட்லேண்ட்ஸ் ஷு' போட்டு 
'ரேமாண்ட்ஸ் மாடல்' மாதிரி போனால்  
பயபுள்ளைக கேக்கறானுங்க
'ஆன்சைட்  போகபோறியான்னு?'

அட! ஆமாம்ங்க..
தனுஷ் மட்டும் இல்ல
நானும் தான்
'காதலில் விழுந்தேன்!!!©

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...