நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

23 March 2011

என்னை குற்றம் சொல்லாதே!




குழம்பு இனிக்கிறது என்று
என்னை கோவிக்கிறாய்
என்ன செய்யட்டும்?!
அஞ்சரை பெட்டியில் அல்லவா
அளவற்ற உன் முத்தங்களை
யாருக்கும் தெரியாமல்
மறைத்து வைக்கிறேன்
எப்படி தடுத்தாலும்
தாளிக்கும் பொழுது
தவறி விழுந்து விடுகின்றன...
குழம்பு இனிக்காமல் எப்படி இருக்கும்?
ஒன்று கோபத்தை மறந்துவிடு
இல்லை.. முத்தங்களை நிறுத்திவிடு
மீண்டும் மீண்டும்..
என்னை குற்றம் சொல்லாதே!

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...