நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 March 2011

உன் கண் தீண்டலை கூட



உன் கண் தீண்டலை கூட 
இழந்துவிடுவேனோ?
இழத்தலில் இருப்பை தேடுகிறேன்
இருக்கும்போது இழந்துகொண்டிருந்தேனா?
காதலில் காதல் வளர்த்தேன்
இனி கண்ணீரிலா வளர்ப்பேன்?


மெல்ல மெல்ல பூத்தது
மீண்டும் மீண்டும் பூக்காது..
அழுதுகொண்டே காதலை சொன்னேன்
சிரித்துகொண்டே பிரிவை சந்திக்கிறேன்
எந்த வலி அதிகம் என்பேன்?


ரகசியமான இதழ்தீண்டல்களை 
ரகசியமாகவே நினைத்துகொள்வதா?
மீண்டும் அந்த ரகசியங்கள்
எப்போது நிகழும்?


காத்திருத்தலில் காதலா?
இல்லை காதலினால் காத்திருத்தலா?
வாய்மொழியின் ஒலிவடிவத்தில்
அது மட்டுமா நீ?
மௌனத்தின் சான்றாய் நிற்கிறேன்


எனக்காக நீ இருக்கிறாய் 
என்றாலும், நெஞ்சத்தின் வலி
கொல்லாமல் கொல்லுகிறதே..
என்ன சொல்லி தேற்றிக்கொள்ள 
நீ இருந்தும்
என்னருகில் இல்லை என்பதை... ©

0 கருத்துரைகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...