நடும் விதைகளெல்லாம்
மரமாவது இல்லை
பல நேரங்களில்
ஆனால்...
விழும் விதைகள் கூட
முளைத்து விடுகின்றன
சில நேரங்களில்
நடுவது
நம் செயல் என்றாலும்
பின் எழுவது
விதைகளின் விடாமுயற்சியே
மனித மனதிலே
வேதனைகள் விருட்சமாகின்றன
பல நேரங்களில்
நம்பிக்கைகள் துளிர்க்கின்றன
சில நேரங்களில்
நடப்பதும் அதை முடிப்பதும்
நம் கையில் இல்லை
என்றாலும்...
வேதனைகளை உடைத்து
சாதனைகளை படைப்பது
விடா முயற்சிகளும்
விழா நம்பிக்கைகளுமே..!