நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 March 2011

எத்தனை காதல் சொல்ல?



நெருக்கமாய் உன்கைகோர்த்து
நீண்ட தூரங்கள் நடந்து

வேர்வைபூத்த நெற்றியில்
மெதுவாய் முத்தமிட்டு

விரிந்தமார்பின் வெதுவெதுப்பில்
முகம் புதைத்து

ஏக்கம்நிறைந்த கண்களில்
எப்போதும் உன்னை நிரப்பிக்கொண்டு

உதடுகள் நான்கும்
முத்தப்போட்டி நடத்த

வெட்கம் மறைக்க
விரல்கள் பின்னியபடி

விலகுவதாய் நடித்து
மீண்டும் நெருக்கியனைக்க

எத்தனை இரவுகள்
பகலும்கூட போதவில்லை

இருந்தாலும் தீராக்காதல்!

வேதனை மிகுந்தபோது
உன்வார்தைகளுக்காய் ஏங்கி

விரல் பிடித்து உறங்கி
கதைகேட்டு உணவுண்டு

மறக்கவே முடியாத
காதல்சொன்ன கணத்தை

மீண்டும் மீண்டும் 
நினைவூட்டி கொண்டு 
இப்படி...

எத்தனையோ கவிதைகள்
உனக்காய் எழுதிவிடலாம்

நாம் வாழும் நாட்களே
அவற்றின் மௌனசாட்சியாய்!©

0 கருத்துரைகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...