நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 March 2011

இப்போதாவது சொல்!



அரை பார்வை
சிறு புன்னகை
விரல் நுனியின் தீண்டல்
ஒரே ஒரு இதழ் முத்தம்

ஒரு அடி தூரத்தில் நீ
அவசரமான இரண்டு நிமிட பேச்சு
சாப்பிட்டியா என்ற ஒரு வரி விசாரிப்பு
உன் நினைவில் உறக்கம்

கைகோர்த்து கனவில் ஒரு நடை
ஒரு வரி கவிதை
உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன்
என்ற சின்ன பொய் 
உயிர் உருகுதடா...

என்றாவது ஏதாவது நடக்கும்
என்ற ஏக்கத்தில்   
பால்குடி மறக்கவைக்கப்படும்
குழந்தை போல ஏங்கி ஏங்கி
உன்னையே.. 
நினைத்து நினைத்து அழும் என்னை
எப்படி சமாதான படுத்த போகிறாய்?!
இப்போதாவது சொல்!  ©

0 கருத்துரைகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...