நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

25 May 2011

குடைக்குள் உன்னை இழுக்கையிலே



இரவெல்லாம் விடாமல் மழை
இடைவிடாமல் உன் நினைவுகளும் 
விடிந்தபின்னும் சாலையெங்கும் ஈரம்
அனிச்சையாய் கன்னத்தை துடைக்கிறேன்
******************************************************

மழைநாளின் இரவில் 
மின்சாரம் தடைபட்டாலும்
கண்கள் பறிக்கும் 
மின்னல் வெளிச்சமாய் 
உயிரை பறிக்குது 
அன்பே! உன் நினைவுகள்
அருகில் நீ இல்லாதபொழுதும் 
******************************************************

பள்ளமென்றும் பாராமல் 
வெள்ளமென பாயும் நீராய் 
என் குறைகள் மறைக்கும்  
உன் அன்பு காதல்
******************************************************

நீலமான வானத்தை நோக்கினால் 
அது நீ தானடி!
அதில் 
தினம் ஒரு வடிவெடுக்கும் 
மேகம் நானே தான்
வானத்தை போலவே..
நீயும் மௌனமாய் நோக்கியபடி
என் மாற்றங்களையும் 
உன் ஏமாற்றங்களையும் 
****************************************************** 
  
அன்பே! 
மழை நீர் சுமக்கா
மேகம் இருக்கக்கூடும் 
காதல் நினைவுகள் சுமக்காத இதயம்
ஏதும் இருக்கக்கூடுமா என்ன?!
***************************************************** 

எதிர்ப்படுகையில் 
உதட்டில் விழும் 
ஓர் மழை துளி
எதிர்பாராமல் நீ தரும்
சிறு முத்தமென 
*****************************************************

நனையாதே என்று
குடைக்குள் உன்னை இழுக்கையிலே  
நனைகிறேன் நான் 
உன்னாலே உன்னாலே..
*****************************************************

17 comments:

  1. பள்ளமென்றும் பாராமல்
    வெள்ளமென பாயும் நீராய்
    என் குறைகள் மறைக்கும்
    உன் அன்பு காதல்
    - Classic

    ReplyDelete
  2. அன்பு நன்றிகள் வெங்கடேஷ்! :)

    ReplyDelete
  3. ஓ! கவிதை மழை!! அருமை! :-)

    குறிப்பாக,
    >>>இரவெல்லாம் விடாமல்<<<
    அசத்தல்!!

    ReplyDelete
  4. நினைவுகள் அருமை....!!!

    அசத்துங்க அசத்துங்க...

    ReplyDelete
  5. நன்றி உமாஜீ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! :)

    ReplyDelete
  6. எதிர்ப்படுகையில்
    உதட்டில் விழும்
    ஓர் மழை துளி
    எதிர்பாராமல் நீ தரும்
    சிறு முத்தமென

    சூப்பர்....வெயில் காலத்தில் மழை(அதுவும் காதல் மழை ) அசத்தல் தோழி

    ReplyDelete
  7. வாங்க மனோ சார்! :)

    ரேவா! அங்கயும் மழை பெய்யுதா? :)

    ReplyDelete
  8. இரவெல்லாம் விடாமல் மழை
    இடைவிடாமல் உன் நினைவுகளும்
    விடிந்தபின்னும் சாலையெங்கும் ஈரம்
    அனிச்சையாய் கன்னத்தை துடைக்கிறேன்//

    அழுகை!!

    ReplyDelete
  9. அன்பே! உன் நினைவுகள்
    அருகில் நீ இல்லாதபொழுதும் //

    உன் நினைவுகள் பிறகு நிறுத்தற் குறியீடுகள் இட்டால் விளக்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும்!!

    ReplyDelete
  10. இயல்பான நல்ல கவிதைகள்.. முக்கியமாக கவிதைகளை விட அதற்கான படத்தேர்வு மிக்க மிக்க சிறப்பு.!!

    ReplyDelete
  11. @தம்பி கூர்மதியன் said..

    கன்னத்தை துடைத்தது அழுகையினால் இல்லை.. :)
    தங்கள் கருத்துக்கு நன்றி கூர்மதியன்!

    ReplyDelete
  12. //நனையாதே என்று
    குடைக்குள் உன்னை இழுக்கையிலே
    நனைகிறேன் நான்
    உன்னாலே உன்னாலே..//
    என்னே ஓர் ரசிப்பு!

    ReplyDelete
  13. நனையாதே என்று
    குடைக்குள் உன்னை இழுக்கையிலே
    நனைகிறேன் நான்
    உன்னாலே உன்னாலே..//
    ரசனை அருமை.

    ReplyDelete
  14. யம்மாடி!காதல் கவிதைகள் கலக்கல்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...