மழை வரும் போதெல்லாம்
நீயும் வருகிறாய்
துளிகளாக இல்லாமல்
நெஞ்சில் வலிகளாக
கையில் பிடித்தபின்னும்
நிற்காத துளிகளாய்
நாம் கைபிடித்த பின்னும்
நீண்ட தூரத்தில்
ஏதோ பேச நினைத்து
நான் அழைத்த அழைப்பெல்லாம்
உன் குரல் கேட்ட நொடியினிலே
உடைந்து சிதறுகின்றன
கண்களில் நீர் துளிகளாய்
காதலுக்கு மறுபெயர் கண்ணீரா?
துவைக்க விருப்பமில்லாத
வேர்வை வாசம் நிறைந்த
உன் சட்டை
உனக்கான இடத்தை
என்னுள் நிரப்பியபடி
நனைந்த இலைகள் கூட
ஒன்றை ஒன்று முத்தமிட்டபடி
நான் நிற்கிறேன்
மரமெனவே..
ஜன்னல் கம்பியிலே
இரு பறவைகள்..
ஒன்றாய் அணைப்பினிலே
நானும்
நீ பரிசளித்த பொம்மையும்
அவற்றை போலவே...
மிக மெல்லிய
காதல் பாடல்
எங்கோ ஒலிக்கிறது
நம்முடைய
பிரிவின் குரலாய்..
எனக்கிருக்கும் வலி
உனக்குள்ளும் இருக்கும்தானே?
உன்னை அழைக்க முயல்கிறேன்
மீண்டும் மழை..
மழை வரும் போதெல்லாம்
ReplyDeleteநீயும் வருகிறாய்
துளிகளாக இல்லாமல்
நெஞ்சில் வலிகளாக//
பிரிவின் வலியினை
இதனைவிட வலிமையாகச் சொல்லுதல் கடினமே
மனமசைத்துப்போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அன்பு நன்றிகள் ரமணி சார்! :)
Deleteகாதலுக்கு மறுபெயர் கண்ணீரா?
ReplyDeleteஅருமையான வரிகள்... அனுபவமும் கலந்த உணர்வோட்டம் அங்காங்கே தெரிகிறது.. வாழ்த்துக்கள்..
அழகிய கவிதை
ReplyDeleteஅழகான வரிகள் , தொடரட்டும்
ReplyDeletesuhamaaha ullathu
ReplyDeleteநல்ல வரிகள்... பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDeleteவட்டம் முடிந்துவிட்டது!
ReplyDeleteநன்று
அழகான கவிதை! அருமை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு, பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக மெல்லிய
ReplyDeleteகாதல் பாடல்
எங்கோ ஒலிக்கிறது
நம்முடைய
பிரிவின் குரலாய்.. Classic...Super Line...