நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

01 November 2011

நாளையும் மழை நீடிக்குமாம்


நாளையும் மழை நீடிக்குமாம்
நீ போடும் சண்டைகளை போலவே
மௌனமாய் எதிர்கொள்கிறேன் 
குடை இருந்தும் நனைபவனாய்
இடி இடியென கத்திவிட்டு
மின்னல் வேகத்தில் கண்களை கசக்கி  
மழையென கண்ணீர் சிந்துகிறாள் 
முடிவில் நனைந்தது என் சட்டை 
மழை பிடிக்கும் 
என்று சொல்லி
குடை பிடிக்கிறாள்
என்னை பிடிக்கும் 
என்று சொல்லி
நண்பன் என்கிறாள் 

18 August 2011

இரவும் நிலவும் நீயும்

கண்களில் 
தூக்கமும்
கனவுகளும்
நிரம்பி வழிய
சட்டென வந்த 
உன் நினைவினால் 
நானும் கலைந்துவிட்டேன்  

இரவெல்லாம் கண்விழித்து
முடிவில் கண்டுபிடித்தேன்
உறக்கம் கலைவது
உன்னால் மட்டுமே என்று 
Related Posts Plugin for WordPress, Blogger...