நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

20 May 2011

நேற்றைய இரவில் நீ

**********************************************************************************

கதவை மூடியதும் 
முத்தமிட துவங்கின
உன் நினைவுகள்
மௌனமாய் நான் நிற்க 
சப்தமிடுகிறது கதவு 
---------------------------------------------------------------------------


விண்ணை தொட்டு வந்ததினால்
பெருமை கொண்டது மழை
உன்னை தொட்டு போனதினால் 
பொறாமை கொண்டது என் மனம்
-------------------------------------------------------------------------- 


கோலம் போடுகையில்
குனிந்து போடாதே
வெட்கத்தில் சிவக்கிறது பூமி
கோபத்தில் சிவக்கிறேன் நான்
---------------------------------------------------------------------------


தலைக்குளித்த பின்
கூந்தல் துவட்டி  
நீ உதிர்க்கும் நீர்த்துளிகள்
பார்த்து கொண்டிருந்த 
என் முகத்தில் பருக்களாய்
-------------------------------------------------------------------------- 


எதிர் வீட்டு குழந்தைக்கு
நீ கொடுத்த முத்தத்தை
வாங்க முடியவில்லை
எதை கொடுத்தும்
அதனிடம் இருந்து..
---------------------------------------------------------------------------


ஒரு புகைப்படம் கேட்டேன்
முடியாது என்றாள் 
முயற்சியை கைவிட்ட வேளையிலே 
முன் வந்து நிற்கிறாள் 
எடுத்துகொள் என்று 
குழந்தைகளை படமெடுப்பது
அத்தனை சுலபமில்லை..
---------------------------------------------------------------------------

யார் தொலைத்த கவிதை அவள்?


பாட ஒரு மொழியில்லையே 
பாவி மக பூஞ்ச்சிரிப்ப
பாக்க ஒரு நாள் போதலையே
பாதகத்தி கொடுத்து வைக்கலையே
அடியே! உன்ன கொல்லனுமே
அப்பனவன் பாக்கும்முன்னே  

விடி வெள்ளி வேணுமின்னு 
வேண்டி நான் நிக்கையிலே
வேண்டாம வந்துத்தித்த
பெண்ணிலவே.. வெண்ணிலவே.. 

அம்மான்னு நீ அழைக்குமுன்னே
மண்ணள்ளி போட்டிடவா
இல்ல நெல்லள்ளி  போட்டிடவா
நோகாம கொல்லனுமேன்னு
என் நெஞ்சுக்குழி நோகுதடி

பிச்சைக்காரன் வந்து நின்னா
பிடி சோறு போட்டிடுவேன்
பொண்ணா நீ பொறந்ததினால்
பாலாட பாலும் இல்லையடி 

ஏடு எடுத்து படிச்சிருந்தா 
ஏன்னு ஒரு வார்த்த கேட்டிருப்பேன் 
ஐஞ்சு காசு சேர்த்திருந்தா 
அஞ்சுகத்த கொஞ்சியிருப்பேன்
வக்கத்த பொம்பளைக்கு 
உன்ன வாழவைக்க வழியில்லையே 


தங்க வில ஏறுதடி 
தங்கமே நீ பொறந்த வேளபாத்து
ஏட்டுகல்வி கூட
எட்டாத விலையிலடி
கட்டிக்க வரவனோ..
கட்டாயம் கேப்பான் வரதட்சன 

யார் செய்ஞ்ச தப்பு இது?
ஆண் பெண்ணை ஏசரானே
பொண்ணா நீ பொறக்க 
அவனல்லோ காரணமே..

கூட பொறந்தவளும் 
கூடி படுத்தவளும்
அவன பெத்தவளும் 
அவன் கும்பிடுந் தெய்வமுமே 
பொம்பளைக  தானே?!
புறந்தள்ளி போறானே 
அவன் பெத்த உன்னமட்டும்..  

என் அப்பனை பேசறதா?
உன் அப்பனை ஏசறதா?
இல்ல..  
சமூகத்த தான் சாடறதா?
சாகாம உன்ன காக்க
ஒத்த வழி எனக்கில்லையே  

பொறந்து வளந்து
பொண்ணா நீ பொழைக்கறத்துக்கு
போதுமடி நீ வாழ்ந்த 
இந்த ஒரு நிமிசம்.. 

இங்குமங்கும் அலபாஞ்சி 
என்ன போல நீ தொலைக்க
பொண்ணு ஒண்ணு பெத்து 
பெருஞ்ச்சோகத்துல அழுவத விட 

தேடி வந்த தேவதைய
தெய்வத்திடமே அனுப்பிடறேன் 

Related Posts Plugin for WordPress, Blogger...