நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

01 December 2011

உன் பெயர்தான் அதற்கும்


சண்டைகளின் பொழுது  
வார்த்தைகளை தேடுகிறாய்
சாமாதானங்களின் பொழுது 
ரோஜாவை தேடுகிறாய்
எப்பொழுது தான்
என் மனதை தேடுவாய்?

காதலிக்கும் பொழுது
கணக்கில்லாமல் கொடுத்தாய் 
சண்டைகள் போடாமலிருக்க 
கல்யாணத்திற்கு பின்னரோ
கடமைக்கு கொடுக்கிறாய் 
சண்டைகள் முடிந்த பிறகு

சிறு குழந்தையெனவே அழுகிறேன்
நம் சண்டைகளின் நடுவில்
நடிப்பென சொல்கிறாய்
நான் நடிகை இல்லை
உன் காதலி 

நம் ஒவ்வொரு சண்டைகளையும்
உடனே மறந்து விடுகிறாய்
நாம் காதலித்த கணங்களை
மறந்ததை போலவே 

எப்போதும் என்னுடன் இருக்கிறது
நீ கொடுத்த கரடிபொம்மை ஒன்று
அதனுடனும் நான் சண்டைபோடுகிறேன்
சண்டைகள் முடிந்த பின் 
அதுமட்டும் மன்னிப்பு கேட்காது 
உன் பெயர்தான் அதற்கும் 

01 November 2011

நாளையும் மழை நீடிக்குமாம்


நாளையும் மழை நீடிக்குமாம்
நீ போடும் சண்டைகளை போலவே
மௌனமாய் எதிர்கொள்கிறேன் 
குடை இருந்தும் நனைபவனாய்
இடி இடியென கத்திவிட்டு
மின்னல் வேகத்தில் கண்களை கசக்கி  
மழையென கண்ணீர் சிந்துகிறாள் 
முடிவில் நனைந்தது என் சட்டை 
மழை பிடிக்கும் 
என்று சொல்லி
குடை பிடிக்கிறாள்
என்னை பிடிக்கும் 
என்று சொல்லி
நண்பன் என்கிறாள் 
Related Posts Plugin for WordPress, Blogger...