பிரிவின் வலி
உனக்கு புரியவேண்டுமென்றே
ப்ரியம் தொலைத்ததாய் நடிக்கிறேன்
ப்ரியம் தொலைத்ததின் வலி
எனக்கு புரியவேண்டுமென்றே
பிரிந்து போவதாய்
நீயும் நடிக்கிறாய்
வலிகள் குறைய
வழிகள் ஏதும்
புரியாத நிலையில்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
இலைகள் நனைந்தாலும்
வேர்கள் நனையாத மரங்களாய்
தூரங்கள் தொலைத்த
ஒரு காதல் வேண்டுமென்று
தொலைத்து கொண்டிருக்கிறேன்
என் பாதைகளை..
என் இருப்பிருக்கும்
இறப்பிற்கும் நடுவே
நீளும் பயணங்கள்
உன் சந்திப்புகளை எண்ணியபடி..
எல்லா அழுகைக்கும் நடுவில்
ஒரு சிறு பிள்ளையெனவே
உன் முகம் பார்க்கிறேன்
அன்னையெனவே எனை அணைத்து
நீ தரும் சிறு முத்தத்துக்காய்..
அருமை வரிகள்... ரசித்தேன்...
ReplyDeleteகவிதை மிக அருமை......பகிர்வுக்கு மிக்க நன்றி .....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDelete