நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

20 May 2012

ஒன்றும் சொல்வதற்கில்லை!



இரட்டை கோபுரங்களை
அருகருகில் பார்த்தபோது
ஒன்று என்னை போலவும்
மற்றொன்று உன்னை போலவும்
அருகருகில் நிற்கின்ற என்றேன்

உயர்ந்து நிற்பது
அவன் என்று
உடனே சொல்லுகிறான்

மௌனமாய் நிற்கிறோம்
கோபுரங்களும் நானும்


நண்பர்களும் உறவினர்களும்
ஓயாது வருகின்ற நாட்களில்
சமையல் அறைக்குள் கூட
எட்டிபார்த்திடாத அவன்
என்னை பற்றி சிரித்தப்படி
எல்லோரிடமும் சொல்லுவதெல்லாம்
"அருமையாய் சமைப்பாள்"
என்பது தான்

வெறுமையான சிரிப்புடன்
நான் நினைப்பதெல்லாம்
"சமையல் தெரியாத பெண்ணாய்
நான் இருந்திருந்தாலே
சந்தோசமாய் வாழ்ந்திருப்பேனோ?!"



06 April 2012

காயா? பழமா..?!



இன்றைய விடியலிலிருந்து
அமைதியாய் இருக்கிறான்
ஏனென்று கேட்டால்...
குறும்பாய் குற்றம் சொல்கிறான்
'இரவெல்லாம் உன்னை கொஞ்சியதில்
வார்த்தைகள் தீர்ந்துவிட்டன!'
Related Posts Plugin for WordPress, Blogger...