உன் குடையில் இடம் கொடேன்
ஒரு ஓரமாகவாவது
ஒரு ஓரமாகவாவது
நனைந்து விட்டு போகிறேன்...
முகம் மறைக்காதே குடை கொண்டு
நனைந்த நீ தெரிகிறாய்..
இடி இடிக்கையில்
என்னை நினைத்துக்கொள்..
இன்னமும் பயமாக இருந்தால்..
என்னை அணைப்பதாய் நினைத்துக்கொள்!
மழையில் கலைந்த கோலத்தை
வருத்தமாய் பார்க்கிறாய்
வார்த்தைகளில்லாமல் பார்க்கிறேன்
வார்த்தைகளில்லாமல் பார்க்கிறேன்
கண்ணில் மைகரைந்து நிற்கும்
உன் அழகிய கோலத்தை..
ஏதாவது ஒரு மழைநாளில்
என் வீடு வந்து போ
தேநீர் கோப்பையும் நானும்..
உன் அணைப்புக்காய் ஏங்கியபடி ..
அம்மா திட்டுவாள் என்று
அவசரமாய் ஓடாதே..
கண்ணீர் சிந்துவோம்
இன்னும் அதிகமாய்
மழையும் நானும்..
மழையில் நானும் நனைந்தேன்..
ReplyDeleteமண் வாசம் வீசுகிறது...
வாழ்த்துக்கள்..
அழகான கவிதை சாரல்கள்..
ReplyDeleteநன்றி கருன்! :)
ReplyDeleteநன்றி சௌந்தர்! :)
//
ReplyDeleteஅம்மா திட்டுவாள் என்று
அவசரமாய் ஓடாதே..
கண்ணீர் சிந்துவோம்
இன்னும் அதிகமாய்
மழையும் நானும்.. //
chanceless
பட்ங்களும் அதற்கான பதிவுகளும் மிக அருமை
ReplyDeleteமீண்டும் மீண்டும் ரசித்துப் பார்க்கத் தூண்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி! :)
ReplyDeleteநன்றி நாகசுப்ரமணியன்! :)