இறக்கும்வரை வாழ்ந்துக்கொண்டு இருப்பேன்
வாழும்வரை இறந்துக்கொண்டும் இருப்பேன்
உன் மீதான காதலால்
எச்சில் என
என் முத்தங்களை
துடைக்கும் முன்
சற்றே ருசித்துப்பார்..
உப்பின் சுவையும் கலந்திருக்கும்
உன்னாலே உருவான
என் கண்ணீர் துளிகளினால்..
நாம்
பிரிந்திருக்க
தேவைப்படவில்லை
ஒரு காரணமும்
ஆனால்..
சேர்ந்திருக்க
தேவைப்படுகின்றன
சில காரணங்களாவது
உன்னுடன் பேசாமல்
ஒரு நிமிடமாவது
இருக்க முடியுமா?
மௌனமாய் கேட்கிறது
என் அலைபேசி..
மயிலிறகு அதிகமானால்
வரும் பாரத்தை விட
காதல் அதிகமானால்
வரும் பாரம் அதிகம்தான்!!!